நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்தனர். இதனையடுத்து திருமண வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் இருவரும் விவகாரத்தை அறிவித்தனர். இதனைதொடர்ந்து சமந்தா மயோசிடிஸ் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில்  நடிகை சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களில் நான் மிகவும் மதிக்கிறேன் என நடிகர் நாக சைதன்யா உருக்கமாக பேசியுள்ளார். திருமண வாழ்க்கை குறித்து முதன் முதலாக மனம் திறந்த நாக சைதன்யா, ‘சமூக வலைதளங்களில் எங்களைப் பற்றி வெளியாகும் வதந்திகள் தான் எங்களுடைய நல்லுறவை பாதிக்கிறது. சமந்தா மிகவும் நல்ல பெண். வாழ்க்கையில் அவர் விரும்பும் அனைத்து சந்தோஷங்களும் கிடைக்க வேண்டும்’ என கூறினார்.