சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலைக்கு வருவோருக்கு இன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை 11 மணிக்குள் வாகனங்களில் வரும் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு வரும் பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை முடிந்து இரவு கோவில் நடை அடைக்கப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.