திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஜனவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் டிக்கெட் இல்லாமல் வரவேண்டாம் என்று தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் புத்தாண்டு வரை திருமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.

இதற்கான தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் விற்பனையாகி விட்ட நிலையில் இலவச தரிசன டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இனி இலவச டிக்கெட் ஜனவரி இரண்டாம் தேதிக்கு மேல் வினியோகம் செய்யப்பட உள்ள நிலையில் ஜனவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.