இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றுள்ளனர். மேலும் பல பிரபலங்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக  கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், டெல்லியில் உள்ள வீட்டில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது குழந்தைகள், முக்கிய பிரமுகர்கள் என பலதரப்பட்டவர்களை வரவழைத்து அவர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் உன்னத போதனைகளை நினைவுகூருவோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.