இந்தியாவில் சமீபகாலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி மாரடைப்பால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. சமீபத்தில் யோகேஷ் சிங் என்ற மாணவர் ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஆசிரியர் மேல் சரிந்து விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் சேர்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர் மரணத்தால் மொத்த பள்ளியும் சோகத்தில் மூழ்கியுள்ளது.