கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக இலவச வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமும் கேரளா தேவசம் போர்டு சார்பில் கொண்டுவரப்பட்ட இந்த வைபை சேவை திட்டத்தை போர்டு தலைவர் பிரஷாந்த் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக சன்னிதானம் நடைபந்தல், திருமுற்றம் மற்றும் மாளிகை புரத்தில் இந்த இலவச வைஃபை சேவை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.