கேரளாவில் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வரும் நிலையில் சபரிமலைக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பக்தர்கள் அந்த பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை தொடர்ந்து பேரிடர் மீட்பு குழுவினர் சபரிமலையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.