தமிழகத்தை பொறுத்தவரையில் மக்களின் வசதிக்காக வார இறுதி நாட்கள் மற்றும் சிறப்பு பண்டிகை நாட்களின் போது அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 9 இன்று முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும், மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.