உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி முதல்வர் சனாதன எதிர்ப்பு பற்றிய கருத்துகளை செப். 15ஆம் தேதி மாணவிகள் தெரிவிக்கலாம் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய பாஜக  எம்எல்ஏ வானதி சீனிவாசன், “சனாதனம் குறித்து அரசு கல்லூரி மாணவர்களிடையே திமுக  நஞ்சை விதைக்கிறது. கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கை அரசியல் அமைப்புக்கு எதிராக இல்லையா?” என தெரிவித்துள்ளார்.