அகிம்சையை விரும்புபவர்கள்தான் சனாதனவாதிகள் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சனாதனம் பற்றி விமர்சிப்பவர்களின் நாக்கை வெட்டுவேன் என்று அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சொல்லி இருப்பதும் தவறுதான்.

இப்படி பேசுபவர்கள் சனாதனத்திற்கு எதிரானவர்கள்தான். ஸ்டாலினின் உதயநிதி தலையை வெட்டுவேன் என்று சொன்னவரும் போலிச் சாமியார்தான். அகிம்சையை விரும்புபவர்கள்தான் சனாதனவாதிகள் என தெரிவித்துள்ளார்.