சேலம் மாவட்டத்தில் விபத்து நிகழ்த்தி நிற்காமல் சென்ற வாகனத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் விரட்டிப் பிடித்துள்ள சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோடிக்காடு சாலையில் மினி லாரி ஒன்று விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து இதனை நேரில் பார்த்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் காரில் 1 கி.மீ. துரத்திச் சென்றுள்ளார்.

பின்னர் விபத்தை ஏற்படுத்திய மினி லாரியை மடக்கி பிடித்தார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளித்திடவும் மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.