மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று ஜனவரி 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி. மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க கூடாது.

இரவு கோவிலில் தங்க அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கோவிலுக்கு எடுத்து வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமலையின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டு மாதங்களுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.