மணல் குவாரி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் திருச்சி, தஞ்சை, வேலூர், கரூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு E.D மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் ஐந்து ஆட்சியர்களுக்கும் E.D கடந்த நவம்பர் மாதத்தில் சம்மன் அனுப்பியது. உச்ச நீதிமன்றமும் விசாரணையில் ஆஜராக உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து E.D மீண்டும் சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று ஐந்து பேரும் இன்று நேரில் ஆஜராவார்கள் என தெரிகிறது.