தமிழகத்தில் நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் வெயில் போன்ற காரணங்களால் பள்ளி திறப்பு தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜூன் மூன்றாம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழகத்தில் முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர் அறிவித்துள்ளார். இதே நாளில் தான் மற்ற மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது.