த மிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று சில இடங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோடை காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில்இன்று (ஏப்ரல் 25) திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 18 வடக்கு மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.