ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் எனக் கூறி வந்தாலும் பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி வரும் என்பதை பொறுத்துதான் அ.தி.மு.க-விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரிய வரும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பயன்படுத்தி அ.தி.மு.க.வில் தனது இருப்பை காட்ட ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு வந்தபோதிலும் எடப்பாடி பழனிசாமியே ஸ்கோர் செய்த நிலையில் ஓ.பி.எஸ் -க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடன் அடுத்த கட்ட நகர்வு குறித்து நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்திற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் இந்த கூட்டத்தில் என்ன முடிவெடுக்க போகின்றார் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க-விற்குள் ஏற்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு டெல்லியை எட்ட முடியாதது என கூறுகின்றார்கள். மேலும் ஓ.பி.எஸ் தனது நிலைப்பாட்டை டெல்லி தலைமையிடம் எடுத்து வைக்க சரியான ஆள் பார்த்து வருவதாக கூறுகின்றார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு இறுதி நேரத்தில் தம்பிதுரையை  அனுப்பி மோடியிடம் பேசியது அவர்களுக்கு சாதகமாக காட்சிகள் மாற காரணமாக அமைந்துள்ளது.

இவ்வளவு நாளாக பா.ஜ.க-விற்கும், ஓ.பி.எஸ் -க்கும் ஆடிட்டர் குருமூர்த்தி பாலமாக இருந்து வந்தார். அண்ணாமலையின் என்ட்ரிக்கு  பின் அதிலும் தடங்கல் ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர். அண்ணாமலை இயல்பாகவே எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டை வருகின்றனர். அதனால் டெல்லியில் தமக்காக பேசுவதற்கு நம்பிக்கையான ஒருவர் அமையும் வரை அண்ணாமலையின் வாய்ஸுக்கு டெல்லி மதிப்பளிக்கும் வரை அ.தி.மு.க-வில் கால் வைக்க முடியாது என ஓ.பி.எஸ் தரப்பு நினைக்கின்றதாம். இந்நிலையில் ஓ.பி.எஸ்-க்கு நெருக்கடி கொடுப்பதற்காக தொடர்ந்து மீடியாவின் கவனத்தை பெறுவதற்கு சசிகலாவுடன் இணைந்து செயல்படுவதை தவிர வேறு வழி இல்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஓ.பி.எஸ் ஆதரவாளர்களின் கோரிக்கையும் அதுவாகத்தான் இருக்கிறது. ஓ.பி.எஸ் ஈரோடு கிழக்கு தேர்தல் அ.தி.மு.க பின்னடைவை  ஏற்படுத்தும் இரட்டை இலை இருந்தாலும் இணைந்து செயல்படவில்லை என்றால் தி.மு.க தான் வெற்றி பெறும் என்ற வாதத்தை மீண்டும் முன் வைக்கலாம் என ஓபிஎஸ் தரப்பு திட்டமிடுகிறது. அதேபோல் சசிகலாவும்  தொடர்ந்து தனியாக பயணித்து வருகின்ற நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின் இரு தரப்பும் இணைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இப்போதே இணைப்புக்கான பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினால் மட்டுமே மக்களவை தேர்தலுக்குள் கட்சிக்குள் இன்றி கொடுக்க முடியும் அல்லது இருவரும் அந்த தேர்தலில் பார்வையாளர்களாகவே இருக்க வேண்டியது வரும். அதனால் தேர்தல் முடிவுக்கு பின் எடப்பாடி பழனிசாமிக்கு இறங்கு முகம் தான் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.