விருதுநகர் சந்தையில் உளுந்தம் பருப்பு, பாமாயில், துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் திடீரென இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் விலையானது ரூ.1550 என்ற விலைக்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.1,555 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த வாரம் 40 கிலோ மல்லி ₹3,400 முதல் 3500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த வாரம் ரூ.200 குறைவு ஏற்பட்டு ரூ.3200 முதல் 3300 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் மல்லி 40 கிலோ ரூ.3,500 முதல் 4,500 வரை விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.300 குறைந்திருக்கிறது. இதனால் மூட்டை ஒன்றிற்கு ₹3,200 முதல் 3500 என்ற விலைக்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 100 கிலோ துவரம்பருப்பு ரூ.10,600 என்ற விற்பனை விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வாரம் ரூ.300 அதிகரிக்கப்பட்டு ரூ.10,900 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் துவரம் பருப்பு புதுஸ் நாடு வகை மூட்டை ஒன்றிற்கு ரூ.10,000 என்ற விலைக்கு  விற்பனை செய்யப்பட்டது இந்த வாரம் ரூ.300 அதிகரித்து ரூ.10,300 விற்பனை செய்யப்படுகிறது.

அதனை தொடர்ந்து உருட்டு உளுந்தம் பருப்பு கடந்த வாரம் 100 கிலோ ரூ.10,600 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 200 ரூபாய் உயர்ந்து ரூ.10,800 விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் உருட்டு உளுந்து மூடை ஒன்றிற்கு ரூ.8,200 விற்கப்பட்டது. தற்போது ரூ.400 அதிகரிக்கப்பட்டு ரூ.8,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் தொலி  உளுந்தம் பருப்பின் விலையும் கடந்த வாரத்தை விட ரூ.200 அதிகரித்து தற்போது ரூ.9,200 விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் இட்லி, தோசை போன்ற டிபன் உணவுகள் அதிக அளவில் உட்கொள்ளப்படுகிறது. உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு விலை அதிகரித்த காரணத்தினால் வீடுகளில் உள்ள இல்லத்தரசிகள் அதிர்ச்சடைந்துள்ளனர். மற்றொரு பக்கம் உணவகங்களில் இட்லி, தோசை, வடை போன்றவற்றின் விலை உயரும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் 100 கிலோ பட்டாணி பருப்பின் விலை கடந்த வாரம் ரூ.5,900 எனில் விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 100 ரூபாய் குறைந்து ரூ.5800 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.