மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிலம்பாட்டம், சிறுத்தை உட்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். அதோடு தற்போது ரஜினியின் “ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன் மனைவி பபிதாவை பிரிந்து விட்டதாக சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கோவா விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் ஏற காத்திருந்தபோது விநாயகன் அத்துமீறி நடந்ததாக சக பயணி கூறியுள்ளார். அதாவது, விமானத்தில் ஏற காத்திருந்த சக பயணியை வீடியோ எடுத்ததாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது. எனினும் தான் எந்த வீடியோவும் எடுக்கவில்லை என்றும் விருப்பப்பட்டால் செல்போனை சோதனை செய்யுமாறும் விநாயகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இதை ஏற்க மறுத்த பயணி ஏர்சேவா போர்ட்டல் வாயிலாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் துணைச் செயலாளரிடம் புகாரளித்துள்ளார். இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் மனுவில் விநாயகனை எதிர்மறை மனுதாரராக சேர்க்க மனுதார வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.