தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியா பவானி ஷங்கர். இப்போது தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக இருக்கும் இவர் பொம்மை படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொம்மை படம் இன்று ஜூன் 16-ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் பிரியா பவானி ஷங்கர் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக சொல்லி இருக்கிறார். வெற்றிமாறன் எனில் கதை கூட கேட்காமல் நடிக்க தயார் என கூறியிருக்கிறார். அதோடு மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அழைத்தாலும் கதை கேட்காமல் கூட நடிப்பேன் என கூறி இருக்கிறார்.