நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் 10, +2 பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களை நாளை மறுநாள் நடிகர் விஜய் சந்திக்க உள்ளார்.

சென்னை நீலாங்கரையில் நடைபெற உள்ள இந்த விழாவில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இவ்விழாவிற்கு பேனர், கட்அவுட் வைக்கக்கூடாது என விஜய் உத்தரவிட்டுள்ளார். விஜய்யின் இந்த உத்தரவால் நீலாங்கரை பகுதியில் ரசிகர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.