தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப்பெரிய திரைக் குடும்பத்தை சேர்ந்தவரும் தான் வனிதா விஜய்குமார். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை கைவிட்டார். வனிதா சென்ற 2000-ம் வருடம் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

வனிதாவின் முதல் திருமண வாழ்க்கை கருத்து முரண்பாடு காரணமாக பிரிய, அடுத்தடுத்து 2 திருமணங்களை செய்துக்கொண்டார். எனினும் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில்தான் முடிந்தது. இந்த நிலையில் மகனிடம் இருந்து தன்னை பிரித்தது தன் அப்பா விஜய்குமார்தான் என பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் வனிதா. அவர் என் மகனை பகடை காயாக மாற்றிக்கொண்டார். அவர் தான் என் மகனையும் என்னிடமிருந்து பிரித்தார். அவர் இதை எதற்காக செய்தார் என்று எனக்கு தெரியாது. இருப்பினும் அவர் தான் இது எல்லாவற்றிற்கும் காரணம் என எனக்குத் தெரியும் என்று வனிதா கூறி உள்ளார்.