தென் இந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் “தங்கலான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மாளவிகா தன் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது நடிகர் விக்ரம் தொடர்பான கேள்விக்கு மாளவிகா மனம் திறந்து பதிலளித்துள்ளார்.

அதாவது “தங்கலானை திரும்பிப் பார்க்கும்போது விக்ரம் சார் இல்லாத கடின பயணத்தை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு ஷாட்டிலும் தனக்கு அவர் உதவி செய்துள்ளார். விக்ரம் தன்னலமற்றவர், தன்னை சுற்றி இருக்கும் அனைவரிடமும் மிகுந்த அக்கறை கொண்டவர், சக நடிகர்களை ஊக்குவிப்பவர் என கூறியிருக்கிறார். இவரது இப்பதிவு விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.