தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் கார்த்தி வந்திய தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும், திரிஷா குந்தவை ஆகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

இதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மூன்று நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளில் 61.53 கோடியும், இரண்டாவது நாளில் 45.21 கோடியும், மூன்றாவது நாளில் 42 புள்ளி 80 கோடியும் வசூலித்துள்ளதாக திரை வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வட அமெரிக்காவில் மூன்று மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.