தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சரத்குமார். 90களில் தொடங்கி இன்று வரை டாப் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் விதமாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அடுத்ததாக மிகப்பெரிய சூப்பர் ஹிட் கொடுத்து இன்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள சூரியவம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வெளியே தான் இப்படி இருக்கிறேன் தனக்குள் நிறைய கஷ்டங்கள் புதைந்துள்ளது என சரத்குமார் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், சூரியவம்சம் பாகம் 2 குறித்து ஆறு மாதமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கதை உறுதி செய்தால் படம் தொடங்கப்படும். நூறு வயது வரை கதாநாயகனாக நடிப்பேன். 36 மணி நேரத்திற்கும் மேலாக தூங்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் தனது வெற்றிக்கு காரணம் என சரத்குமார் உருக்கமாக பேசியுள்ளார்.