கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த விஷ்ணு அவரது நண்பர் நிதிஷ் ஆகிய இருவரும் இணைந்து பணம் தங்கம் கிடைக்கும் என நம்பி பச்சிளம் குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக விஷ்ணுவின் சகோதரியின் குழந்தையை தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்து விஷ்ணுவின் பெற்றோர் மற்றும் சகோதரியிடம் கூறியபோது, இது தகாத உறவில் பிறந்த குழந்தை என்பதால் இதற்கு சம்மதித்துள்ளனர். இதனையடுத்து குழந்தையை நரபலி கொடுத்துள்ளனர்.

பின்னர் அப்பகுதியை காலி செய்துவிட்டு வேறு ஒரு பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் விஷ்ணு மற்றும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட தகராறில் விஷ்ணுவும் நிதிஷும் அவரை கொலை செய்துள்ளனர். திருட்டு வழக்கில் கைதான இருவரும் இந்த தகவலை போலீஸில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து புதைக்கப்பட்ட இரண்டு உடல்களின் எலும்புக்கூடுகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.