இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் க்ரெடிட் கார்டுகளுக்கான குறைந்தபட்ச செலுத்தும் தொகையை (Minimum Amount Due) உயர்த்தியிருக்கிறது SBI.

க்ரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், அம்மாதத்திற்கான முழு பில் தொகையை செலுத்த முடியாவிட்டால் குறைந்தபட்ச தொகையை (MAD) மட்டும் செலுத்தலாம். அதனை மறுசீரமைப்பு செய்திருப்பதாக கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் மெயில் மூலம் தெரிவித்திருக்கிறது SBI. இந்த புதிய முறை மார்ச் 15 முதல் அமலுக்கு வருகிறது