கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் நூதனமாக தனது வேண்டுதலை வெளிகாட்டியுள்ளார். களபுரகி அப்சல்பூர் அருகே தேவ்லகங்காபூர் கிராமத்தில் தத்தாத்ரேயா கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது அதிலிருந்து 50 ரூபாய் நோட்டை ஊழியர் ஒருவர் எடுத்துள்ளார்.

அதில் கன்னடத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்த நிலையில் அதை படித்த போது அப்படியே அவர் அதிர்ச்சியாகிவிட்டார். அதாவது தனது மாமியார் விரைவில் சாக வேண்டும் என்று எழுதி ஒருவர் வேண்டுதல் வைத்துவிட்டு சென்றுள்ளார். தற்போது அந்த 50 ரூபாய் நோட்டு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.