செயல்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் இரண்டு நாட்களில் மூட வேண்டும் என்று டெல்லி அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கேசப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார். சுமார் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில் மூடப்படாமல் இருக்கும் அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் உடனே மூட உத்தரவிடப்பட்டுள்ளது.