தமிழகத்தில் கோவில்கள் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத சட்ட விரோதமான போலி இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோவில்கள் பெயரில் அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்ட விரோதமான போலி இணையதளங்களை முறைப்படுத்த உத்தரவிடா கோரிய வழக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

அந்த விசாரணையில் தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட இணையதள முகவரிகளை தெரியப்படுத்த வேண்டும் எனவும் திருமண கட்டணம் மற்றும் நன்கொடை போன்றவற்றுக்கு உரிய ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது