திருப்பதி ஏழுமலையானை வந்து தரிசனம் செய்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்று மக்கள் ஒரு நம்பிக்கை வைத்துள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஒரு கோடி முறை கோவிந்தா… கோவிந்தா… என கைப்பட எழுதி அனுப்ப வேண்டும்.

அவ்வாறு எழுதி கொண்டு வந்தால் குடும்பத்துடன் விஐபி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10,01,116ம் முறை கோவிந்தா.. கோவிந்தா.. என்று எழுதி வந்தால் ஒருவருக்கு மட்டும் விஐபி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.