இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ஞாயிற்றுக்கிழமையை வழங்கியது. இந்தப் போட்டியில், ராஞ்சி மைதானத்தில் விராட் கோலி தனது 83வது சதத்தை அடித்தபோது, பார்வையாளர் அரங்கில் இருந்த ஒரு மர்மப் பெண் அளித்த உற்சாகமான எதிர்வினை இணையத்தில் சமமான கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தப் பெண்ணின் அடையாளம் மற்றும் சமூக ஊடகப் பக்கத்தைக் கேட்டு இணையவாசிகள் படையெடுத்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்ட நிலையில், தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் கண்டறியப்பட்டுள்ளது. எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில், அந்த மர்மப் பெண் மும்பையைச் சேர்ந்த ரியா வர்மா என்பதும், அவர் ஏற்கனவே 2 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபல இன்ஃப்ளூயன்ஸர் என்பதும் தெரியவந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் @_bachuuuu என்ற பெயரில் அறியப்படும் ரியா, நடிப்பு, கேமிங் மற்றும் லைஃப்ஸ்டைல் துறைகளில் இயங்கி வருகிறார்.
Twitter / X do your thing
Find out her 🆔
Pyariiiieee 🌸❤️
#INDvSA | #ViratKohli | #RoKo pic.twitter.com/LXa4jfuNTj
— disputed king (@NebulonVibe) November 30, 2025
தீவிரமான ஆர்.சி.பி (RCB) ரசிகையான இவர், விராட் கோலி சதம் அடித்தபோது மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இதுகுறித்து ரியா தனது இன்ஸ்டாகிராமில், “அவரை மிக அருகில் அமர்ந்து பார்ப்பது, அவர் சதம் அடிப்பதைப் பார்ப்பது, இது ஒரு கனவைவிடக் குறைவானதல்ல,” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். தற்போது இவர் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
