விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான தலைப்புடன் விவாதம் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் ஒற்றை குழந்தையுடன் குழந்தை இனி வேண்டாம் என்று தீர்மானித்த பெண்கள் மற்றும் அவர்களின் கணவர்மார்களுக்கான விவாதம் நடைபெற்று உள்ளது. அப்போது குறிப்பிட்ட ஒரு பெண்ணை பார்த்து நீங்க ஏன் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று கோபிநாத் கேட்கிறார்.

அதற்கு அந்தப் பெண் என்னுடைய கணவர் என் குழந்தை அழும்போதெல்லாம் எழுந்து குழந்தையை நெஞ்சில் சாய்த்தபடி பார்த்துக் கொள்வார். இரவு நேரம் முழுவதும் தூங்காமல் குழந்தையை பார்த்துக் கொண்டு காலையில் வேலைக்கு செல்வார். அப்படி ஒரு நிலையில் என் கணவரை பார்ப்பதற்கு என்னால் முடியாது எனவும் அதனால் தான் ஒற்றை குழந்தையுடன் நிறுத்திவிட்டோம் என்றும் அந்த பெண் கூறி அழுகின்றார். இதற்கு பதிலளித்தவரின் கணவர், என்னுடைய மனைவி இந்த குழந்தையை பெற்றெடுக்கும் போது சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை என்று இரண்டு வழிகளையும் அனுபவித்து விட்டார். எனது மனைவிக்கு இனிய அந்த கஷ்டம் வேண்டாம் என்று பதில் அளித்த நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.