தமிழ் சினிமாவில்  கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர்தான் நடிகை ரெஜினா. இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவர் அளித்த நேர்காணலில் தனக்கு பட வாய்ப்பு தருவதற்கு சிலர் பாலியல் சலுகைகளை எதிர்பார்த்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அதில், எனக்கு 20 வயசு இருக்கும், ஒருமுறை பட வாய்ப்புக்காக ஒருவரிடம் பேசிய போது அவர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு தயாராக இருந்தால் உடனே படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று என்னிடம் கூறினார். அதற்கு அப்போது என்ன அர்த்தம் என்று எனக்கு புரியவில்லை என்றே தனக்கு நடந்த கசப்பான சம்பவம் பற்றி நடிகை ரெஜினா கூறியுள்ளார்.