கோடை காலங்களில் சுற்றுலா தளங்களுக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் சுற்றுலா பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், உதகை மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு விடுதிகளில் தங்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.