தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டைதாரர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ரேஷன் அட்டையில் புதிய பெயர் சேர்த்தல், அல்லது நீக்குதல், திருத்தம், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், ரேஷன் கடைகளின் செயல்பாடு குறித்து புகார் செய்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த முகாம் இன்று (மார்ச் 09) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். ரேஷன் அட்டை பயனர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.