தூய்மை பணியாளர்கள் சொந்தமாக கழிவுநீர் அகற்றும் உறுதியை வாங்குவதற்கான கடன் வசதிகள் அளித்து அவர்களை தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் மற்றும் இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது. 61.29 கோடி மானியமாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று 213 தூய்மை பணியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டது.