மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானை வழிபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இந்த விடுமுறைக்கு ஈடாக வருகின்ற மார்ச் 23ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.