எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திர விவரங்களை இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் பத்திரங்களை வழங்கியவர்களின் விவரங்கள் தேதி வாரியாக அதில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலிருந்து திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் தேர்தல் பத்திரம் மூலம் கோடி கோடியாய் நன்கொடை பெற்றுள்ளது.

ஒப்பிட்ட அளவில் அதிமுகவை விட திமுக அதிக அளவில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. தேசிய அளவில் அதிக நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாஜக தான். அதற்கு அடுத்த இடங்களில் காங்கிரஸ் கட்சி உள்ளது.