இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஒரு வாரமாக கொரோனா அதிகரித்து வந்த நிலையில் கர்நாடகாவிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் பேருந்தில் பயணிப்பவர்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.