அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு கொரானா தொற்றுக்கு பயந்து ஒரு பெண்மணி தன்னுடைய மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பில் 3 வருடங்களாக அடைந்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரு குழு அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று வீட்டுக்குள் அடைந்து கிடந்த பெண்மணி மற்றும் மகனை மீடடுள்ளனர். தற்போது அந்த சிறுவனுக்கு 11 வயது ஆகிறது. இந்நிலையில் கணவரை மனைவி வீட்டுக்குள் அனுமதிக்காததோடு அவரை வேறு ஒரு பிளாட் வாங்கி குடியிருக்குமாறு கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக மளிகை பொருட்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வெளியிலிருந்து கணவன் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் தற்போது மீட்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பெண்ணின் மனநிலை சோதிக்கப்படும் என குழந்தைகள் நல உறுப்பினர் உஷா சோலங்கி கூறியுள்ளார். மேலும் கொரானாவுக்கு பயந்து ஒரு பெண் 3 வருடங்களாக வீட்டுக்குள் அடைந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.