நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக கேரளா,ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் கேரளா, அரியானா மற்றும் உத்திரபிரதேசமாகிய மூன்று மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்று மற்றும் நாளை அவசர கால சிகிச்சைக்கான ஒத்திகைகளை நடத்த மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.