துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அதன்படி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மூன்று முறை அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது.

இரு நாடுகளிலும் இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். பிஞ்சு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான பேரை மீட்பது சிரமமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இறந்தவர்களுக்கு உலகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது.