கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த மொய்தீன் என்பவரை விசாரித்த போது. முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் அவரது பொருட்கள் சோதனைக்குள்ளான போது அதிக அளவில் சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள் கார்கள் போன்றவற்றை வைத்திருந்தார். இதனை தொடர்ந்து அந்த பொம்மைகளை சோதனை செய்ததில் அவர் சுருள் வடிவில் மறைத்து கடத்தி வந்த தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கங்களின் மதிப்பு 18.79 லட்சம் ரூபாய் என கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் மொய்தீனை கைது செய்துள்ளனர்.