பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன்பு தனது ஆதரவாளர்களுக்காக காணொளி ஒன்றை இம்ரான் கான் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில் “நான் கைது செய்யப்படுவது எதிர் பார்த்தது தான். கைது செய்யப்படுவதற்கு முன்பு இந்த காணொளியை பதிவு செய்துள்ளேன். எனது ஆதரவாளர்கள் அமைதியாகவும் வலிமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என பேசி இருந்தார்.
Chairman Imran Khan’s message:
My arrest was expected & I recorded this message before my arrest.
It is one more step in fulfilling London Plan but I want my party workers to remain peaceful, steadfast and strong.
We bow before no one but Allah who is Al Haq. We believe in… pic.twitter.com/1kqg6HQVac
— Imran Khan (@ImranKhanPTI) August 5, 2023