கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம் பூயம்பள்ளி பகுதியை சேர்ந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களது ஆறு வயது மகள் சாரா ரிஜி ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி சாரா தனது எட்டு வயது சகோதரனுடன் மாலை டியூசனுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வெள்ளை நிற கார் ஒன்றில் வந்த கும்பல் சிறுவனை தள்ளி விட்டுவிட்டு சாராவை கடத்தி சென்றது. பின்னர் சிறுமியின் தாய்க்கு தொலைபேசியில் அழைத்து ஐந்து லட்சம் தந்தால் அவர்களது மகளை விட்டு விடுவதாக கூறியுள்ளனர். இது குறித்து இத்தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சிறுமியை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கடத்தல்காரர்களிடமிருந்து இரண்டாவதாக வந்த ஆடியோ தகவலில் சிறுமி காயங்கள் இன்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் 10 லட்சம் கொடுத்தால் சிறுமியை விட்டு விடுவதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.