கேரளாவில் இருந்து கோழி மற்றும் வாத்துக்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மற்றும் கேரள எல்லைப் பகுதியில் நோய் தடுப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.