அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவை தொடர்ந்து தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அடுத்த செமஸ்டர் முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கூடுதலாக கட்டணம் செலுத்திய மாணவர்கள் அந்த தொகையை திரும்ப பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.