மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு நற்செய்தி ஒன்றை வழங்கியுள்ளது. சமீபத்தில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை(DA ) 4 சதவீதம் உயர்த்தி இருந்தது. அதை தொடர்ந்து HRA (House Rent Allowance) போன்ற சில கொடுப்பனவுகள் திருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HRA உயர்வு தொடர்பான உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது. அரசின் இந்த புது அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.