அசாம் மாநிலத்தில் இளைஞர்களுக்கு உதவும் விதமாக ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை அரசு இலக்காக கொண்டு செயல்படுகிறது. இந்த நிலையில் அசாம் கல்வி துறையில் தற்போது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். அசாம் கல்வி அமைச்சர் தன்னுடைய twitter பக்கத்தில் காலி பணியிடங்களுக்கான விவரங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

அதன்படி இடைநிலை கல்வி இயக்குனரகம் 1424 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 7249 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் மேலும் ஒரு சில ஆசிரியர் பதவிகளுக்கான காலியிடங்களை தெரிவித்துள்ளார். அரசின் இந்த வேலை வாய்ப்பு இயக்கத்தின் மூலமாக இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்குவதும் கல்வித் துறையின் தரத்தை உயர்த்துவதும், தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு அரசு செயலாற்றுவதையும் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.