தெலுங்கானா மாநிலத்தில் கார் ஏறி இறங்கியதில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஹயாத்நகர் அடுக்குமாறு குடியிருப்பின் வாகன நிறுத்தத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் மீது கார் ஏறி இறங்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.